பள்ளிக் கல்விக்கு 26,932 கோடி.. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க 758 கோடி ஒதுக்கீடு
பள்ளிக் கல்விக்கு 26,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பள்ளிக் கல்விக்காக 26,932 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று சட்டசபையில் 2017-18ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் 2017-18ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதில் பள்ளிக் கல்வி துறைக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
2017-18-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் பள்ளிக் கல்விக்கென தமிழக பட்ஜெட்டில் 26,932 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.