For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல்லைக் கடித்து, ஓங்கி அடித்து, தூசியை தட்டி... ஜெ. நினைவிடத்தில் தாதாவான சசிகலா

சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா அவரது நினைவிடத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கி அடித்து சபதம் செய்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது நினைவிடத்தில் சபதம் ஏற்பது போல பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கியடித்து சசிகலா மிரட்டினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரையும் குற்றவாளி அறிவித்தது. அவர்கள் 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

உடனே சரணடைய உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் நேற்று பொழுது முழுவதையும் கூவத்தூர் ரிசார்ட்டிலேயே கழித்தார் குற்றவாளி சசிகலா. இன்று பெங்களூரு சிறைக்கு சரணடைய புறப்பட்ட சசிகலா சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பல்லைக்கடித்துக்கொண்டு அடித்த சசி

பல்லைக்கடித்துக்கொண்டு அடித்த சசி

அப்போது ஏதோ முனுமுனுத்த சசிகலா சபதம் ஏற்பதுபோல் மூன்று மூறை ஓங்கி ஓங்கி ஜெயலலிதாவின் சமாதியின் மேல் அடித்தார். முதல் முறை சமாதியின் மேல் அடிப்பதற்கு முன்பாக உள்ளங்கையை உற்றுப்பார்த்த சசிகலா பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கி அடித்தார். இதேபோல் அடுத்த 2 முறையும் ஏதோ முனகிய படியே அவர் ஓங்கி ஓங்கி அடித்தார்.

அடித்து மிரட்டிய சசிகலா

அடித்து மிரட்டிய சசிகலா

ஜெயலலிதாவுக்குப் பின் எப்போதும் அமைதியாக நின்ற சசிகலா இன்று பல்லைக்கடித்துக்கொண்டு அவரது சமாதியில் ஓங்கியடித்தது மிரட்டலாக இருந்தது. உணர்ச்சிப் பெருக்கில் ஜெயலலிதாவின் சமாதியின் மேல் அவர் அடித்து சத்தியம் செய்தப் போதும் தனது கையில் இருந்த பூக்களை ஒவ்வொருமுறையும் தட்டிவிடுவதில் மிகவும் கவனமாக இருந்தார்.

அரசியல் அநாகரிகம்

அரசியல் அநாகரிகம்

உணர்ச்சி ததும்ப சத்தியம் செய்யும் போது யாரும் இப்படி கையை சுத்தம் செய்துக்கொண்டிருக்க மாட்டார்கள். மறைந்த முதல்வரின் நினைவிடத்தில் அடித்து சபதம் ஏற்பது அநாகரிகம் என கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சசிகலாவின் நாடகம்

சசிகலாவின் நாடகம்

இது சசிகலாவின் நாடகம் என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது. . சிறைக்கு செல்லும் முன்பு ஜெ. நினைவிடத்தில் சசிகலா ஓங்கி அடித்திருப்பது சலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாதவர்

அரசியலுக்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாதவர்

சசிகலாவின் இந்த மிரட்டலால் பொது இடத்தில் சசிகலாவுக்கு பேசவும் தெரியவில்லை எப்படி நடந்து கொள்வது என்றும் தெரியவில்லை. அவர் அரசியலுக்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாதவர் என்றும் கருத்து எழுந்துள்ளது.

English summary
Before going to prison, Sasikala paid homage at the memorial of Jayalalitha.Before sasikala gnawed her teeth banging vow at Jayalalitha's memorial and knocked off her hands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X