For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை நிகழ்ச்சியை 'லைவ்வாக' ஒளிபரப்ப அனுமதி கோரிய விஜயகாந்த் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பக் கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், போதுமான நிதியில்லாததால் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது;

இதனால் தான் பங்குதாரராக உள்ள கேப்டன் தொலைக்காட்சியில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தயாராக உள்ளோம்; சட்டசபை நிகழ்வுகளை அறிந்து கொள்வது மக்களின் உரிமை எனக் குறிப்பிட்டிருந்தார்.

vijayakanth

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய அறிவுரை வழங்கி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

English summary
The SC dismissed DMDK leader Vijayakanth's plea on live telecast of TN assembly on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X