காவிரியிலிருந்து தண்ணீர் வராது.. ஆனால் தலைவர் மட்டும் வரலாமா?.. சீமான் ஆவேசம்
காவிரியிலிருந்து தண்ணீர் வராது. ஆனால் தலைவர் மட்டும் வரலாமா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
சென்னை: காவிரியிலிருந்து தண்ணீர் மட்டும் தர மாட்டாங்க. அங்கிருந்து வரும் தலைவர் மட்டும் தமிழகத்தை ஆள வேண்டுமா என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தினத்தந்தி அதிபர் சி.பா. ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். தமிழர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியாதா. அன்புமணி, திருமாவளவன், சீமான், கார்த்திக் ஆகியோரும் பச்சைத் தமிழர்களே.
காவிரியிலிருந்து தண்ணீர் மட்டும் வராது. தலைவர் மட்டும் வரலாமா? தமிழகத்துக்கு வாழ வந்தவர்கள்தான் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றார் அவர்.