For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜான்சிராணியைப் புகழ்ந்த வைரமுத்து கண்ணில் வேலுநாச்சியார் தெரியாதது ஏன்... சீமான் பாய்ச்சல்

ஜான்சிராணியிடம் வீரத்தை வாங்கு என பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு தமிழகத்தின் வேலுநாச்சியார் ஏன் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜான்சிராணியைப் புகழ்ந்த வைரமுத்துவுக்கு வேலுநாச்சியாரின் வீரம் தெரியாமல் போனது ஏன்? என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற மருது பாண்டியர்கள் வீரவணக்க நாள் நிகழ்வில் சீமான் பேசியதாவது:

Seeman slams Vairamuthu on hailing JansiRani

தமிழர்கள் இன எழுச்சி பெற்றுவிடக் கூடாது. அதற்காக மருதுபாண்டியர்களை ஒரு சாதிய குறியீடாக தள்ளு... வேலுநாச்சியாரை சாதிய குறியீடாக தள்ளு

வேலுநாச்சியார் சமாதி எவ்வளவு பெருசு இருக்கு? யாருக்கு தெரியும்? யார் பார்த்திருக்கிறது? முதலில் யார் அந்த வேலுநாச்சியார்?

வரலாற்றில் படிக்கும்போதே ஜான்சிரானி லக்குமிபாய்.. வீரப் பெண்மணி... எங்க ஐயா வைரமுத்தே பாட்டெழுதும்போது, ஐஸ்வர்யா ராயிடம் அழகை வாங்கு.. சரி வாங்கிக்க; ஜான்சி ராணியிடம் வீரத்தை வாங்கு...

ஏன் வேலுநாச்சியார்கிட்ட வீரத்தை வாங்க மாட்டீங்க?யார்ரா ஜான்சிராணி? ஜான்சிராணி வெள்ளைக்காரனை எதிர்த்து சண்டைபோடவில்லை... பக்கத்தில் இருக்கும் பாளையக்காரர்களோடுதான் சண்டை போட்டிருக்கிறார்.. வெள்ளைக்காரனை எதிர்க்கவே இல்லை.

இந்த ஜான்சிராணி லக்குமிபாய் பொறப்பதற்கு 85 ஆண்டுகளுக்கு முன்பே எங்களது அப்பத்தா வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்து இறந்திருக்கிறார். இந்தியாவின் முதல் வீரப்பெண் மகள் எங்க பாட்டிதான்.

பாடத்திட்டத்தில் தென்னாட்டின் ஜான்சிராணி என வேலுநாச்சியாரை எழுதுகிறீர்கள்... நீ வடநாட்டுக்குப் போ... அங்கபோய் வடநாட்டின் வேலுநாச்சியார் ஜான்சிராணி என எழுது!

இவ்வாறு சீமான் பேசினார்.

English summary
Naam Thamizhar Party leader Seeman slammed Lyricist vairamuthu for hailing JansiRani instead of Tamilnadu's VeluNachiyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X