ஓபிஎஸ் ஆதரவாளர் செம்மலைக்கும் அமைச்சர் பதவி?
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்தால் பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக அணிகள் இணைப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிடிவி தினகரன் தரப்பை ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகள் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளன.
எடப்பாடி அமைச்சரவையில் மாஃபா பாண்டியராஜன் மட்டுமின்றி ஓபிஎஸ்சின் மற்றொரு ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. பன்னீர் செல்வத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி கேட்ட கோரிக்கையை எடப்பாடி தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதவிர பாஜக கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சரவையில் தனது ஆதரவாளர்கள் இருவருக்கு அமைச்சரவையில் இடம் பெற்றுத்தர ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.