ஜெயலலிதா குணமடைய சித்தராமையா, நாராயணசாமி பிரார்த்தனை
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதேபோல புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் முதல்வர் ஜெயலலிதா குணமடைய பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து பற்றாக்குறை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தகவலறிந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பதிவில், ''தமிழக முதல்வருக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
I learnt Hon. Chief Minister of Tamil Nadu J. Jayalalithaa is unwell & hospitalized. I wish her speedy recovery.
— CM of Karnataka (@CMofKarnataka) September 23, 2016
இதேபோல் பதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்துள்ள அதிகாரபூர்வ செய்தியில், ''தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். அனைவரின் பிரார்த்தனையும் விரைவில் அவரை குணமடைய வைக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
I Pray for The Speedy Recovery of Health for CM of Tamil Nadu.I Am Sure the Prayers & Wishes of all will Bring Back her soon #Jayalalithaa
— CM Office Puducherry (@CM_Puducherry) September 23, 2016