For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைக்குள் 6 ஐஎஸ் ஏஜெண்டுகள் ஊடுருவல்: சு. சுவாமி திடுக் தகவல்

சென்னைக்குள் 6 ஐஎஸ் இயக்க ஏஜெண்டுகள் ஊடுருவியுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகருக்குள் 6 ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜெண்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜமீல் அகமது என்ற இளைஞர் ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழக இளைஞர்களும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

Six ISIS agents crossed reach Chennai, says Subramanian Swamy

இதனடிப்படையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பால் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இக்பாலுக்கு உதவியாக இருந்த மேலும் சிலரையும் போலீசார் குறி வைத்துள்ளனர். இந்த நிலையில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இன்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் சென்னைக்குள் 6 ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜெண்டுகள் ஊடுருவியுள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக ஊடுருவி 6 ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜெண்டுகள் சென்னை வந்துள்ளனர் என்று அந்த பதிவில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

English summary
BJP Rajya Sabha MP Subramanian Sway said that Six ISIS agents crossed Pak Rajasthan border and have reached Chennai in his twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X