சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்: முன்பதிவு தொடங்கியது
சென்னை: சென்னை-நெல்லை நடுவே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னை எழும்பூர்-நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் (எண்.06042), நெல்லையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 6ம் தேதி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
அதேபோல், சென்னை எழும்பூர்-நெல்லை இடையேயான சிறப்பு ரெயில் (எண். 06044), சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 6ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் நெல்லைக்கு பிற்பகல் 12.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு இன்று (மே-26-செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.