சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் சிறப்பு ரயில்
சென்னை: சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், நாகர்கோவில் - கச்சுகுடா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (வழி: மதுரை,திண்டுகல்,கரூர்,சேலம்,நாமக்கல்) ரயில் எண் 06310: செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இதேபோல செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் (ரயில் எண் 06309) சென்ட்ரலில் இருந்து காலை 11.15 சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவில் - கச்சேகுடா (வழி:திண்டுகல், கரூர், நாமக்கல், சேலம்,திருப்பதி,ரேணிகுண்டா) ரயில் எண் 06308: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 12-ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1.55 மணிக்கு ஆந்திரம் மாநிலம் கச்சேகுடா சென்றடையும்.
இதேபோல அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் (ரயில் எண் 06307) கச்சேகுடாவில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.