கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னை- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு:
அதன்படி, ரயில் எண்.06718 (அதிவிரைவு சிறப்பு ரயில்) திருநெல்வேலியிலிருந்து டிசம்பர் 21 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு 22 ஆம் தேதி காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
ரயில் எண்.06717 (சிறப்பு ரயில்) சென்னை எழும்பூரிலிருந்து டிசம்பர் 22 ஆம் தேதி புறப்பட்டு அடுத்த நாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
ரயில் எண்.06716 (அதிவிரைவு சிறப்பு ரயில்) திருநெல்வேலியிலிருந்து டிசம்பர் 25 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
ரயில் எண்.06715 (சிறப்பு ரயில்) சென்னை எழும்பூரிலிருந்து டிசம்பர் 26 ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.