For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபல கட்டுமான நிறுவனம் மீது நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனம், இடத்தை அபகரித்துக் கொண்டு அங்கு வீடுகள் கட்டித் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாக நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி முதலமைச்சர் தனிப் பிரிவில் நேற்று புகார் அளித்துள்ளார்.

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, ஆர்.ஆர்.பி. என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பத்மநாபன் அபகரித்துக் கொண்டதாக நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகள் லட்சுமி ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

ssr daughter lodges complaint to cm cell

இந்நிலையில், அந்த இடத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஏராளமானோரிடம் பணம் பெற்றுக் கொண்டு, பத்மநாபன் ஏமாற்றி வருவதாக, முதலமைச்சரின் தனிப் பிரிவில், லட்சுமி நேற்று புகார் அளித்தார்.

இதுகுறித்து லட்சுமி கூறுகையில், வீடு கட்டுவதற்காக வங்கிகள் அளித்த கடனுதவியை, பத்மநாபன் அபகரித்துக் கொண்டார். 2012ல் கட்டுமான பணிகளை ஆரம்பித்து 2 ஆண்டுகளில் முடித்திருக்கலால் ஆனால் பொதுமக்களிடம் பெற்ற பணத்தை கட்டுமான பணிகளில் செலவிடாமல் தான் சொந்தமாக நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் பல்வேறு இடங்களில் இடங்களை வாங்கியுள்ளார். இதனால் கட்டுமான பணிகளை முடிக்கவில்லை என தெரிவித்தார்

English summary
Actor ssr daughter lakshmi lodges complaint to chief minister special cell
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X