For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டுக்கல்லில் புல்போதையில் பள்ளிக்கு வந்த பிளஸ்-1 மாணவர்கள்... ஆபாசம் படம் பார்த்து சிக்கினர்!

By Mathi
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் 4 பேர் மதுபோதையில் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் நேற்று பிளஸ் 1 மாணவர்கள் செல்போன் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மாணவர்களிடம் ஆசிரியர் ஒருவர் விசாரணை நடத்திய போது மாணவர்கள் பார்த்தது ஆபாசப் படம் என தெரியவந்தது.

Students drinking Alcohol

அத்துடன் மாணவர்கள் 4 பேரும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. மதுபோதையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
4 Plus-1 students confessed to have had alcohol in Dindigul Govt school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X