For Quick Alerts
For Daily Alerts
Just In
தேவகோட்டை பள்ளியில் மெகா யோகா.. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மெகா யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்தசஷ்டி கழகம் சார்பாக நடைபெற்ற மெகா யோகாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
கந்த சஷ்டி விழா கழகம் சார்பாக நடைபெற்ற மெகா யோகாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகத்தின் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியில் இருந்து மாணவர்களை மெகா யோகாவிற்கு ஒருங்கிணைத்து அழைத்து சென்ற ஆசிரியர்கள் கருப்பையா, ஸ்ரீதர் ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை காலவல்லி நன்றி கூறினார்.
Comments
English summary
Students and teachers of Chairman Manickavasagam school in Devakottai were feted for Mega Yoga.
Story first published: Saturday, June 25, 2016, 10:40 [IST]