சட்டசபை 2வது நாள்: கேள்வி கேட்ட எம்எல்ஏக்கள்... அமைச்சர்கள் பதில்
தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. உயர்கல்வி, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்
மாணவர்கள் பலன் பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சட்டசபையில் பொன்னாகரம் இன்பசேகரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம் கோட்டூர்மலை, ஏரிமலை, அலகாட்டு மலைப்பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து பரசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சூலூர் எம்.எல்.ஏ.கனகராஜ் எழுப்பிய கேள்விக்கு சி.வி.சண்முகம் பதில் அளித்தார். 51 வட்டங்களில் சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, திருமுக்கூடல் மற்றும் உத்திரமேரூரில் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என்றார்.