இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று தூற்றியவர்களை வைத்தே.. ஸ்டாலினை ஓட்டும் தமிழிசை!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார்.
சென்னை: இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று தூற்றியவர்களை வைத்தே கோயில் குளங்களை தூர்வார வைத்திருக்கிறார் இறைவன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார். தமிழிசையின் இந்த கிண்டலுக்கு ஏராளமானோர் ரீடிவிட் செய்து வருகின்றனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோயில் குளங்களை தூர் வாரி வருகிறார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் பல மாதிரியான கருத்துகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார். அதாவது இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று தூற்றியவர்களை வைத்தே கோயில் குளங்களை தூர்வார வைத்திருக்கிறார் இறைவன் என அவர் கூறியுள்ளார்.
இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று............. தூற்றியவர்களை வைத்தே கோயில் குளங்களை தூர்வார வைத்திருக்கிறார் இறைவன்
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) May 21, 2017
தமிழிசையின் இந்த டிவிட்டுக்கு பலரும் ரீடிவிட் செய்து வருகின்றனர். கடந்த 2002ஆம் ஆண்டு இந்து என்றால் திருடன் என அர்த்தம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.