தமிழகக் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் - ஜிகே மணி - வீடியோ
தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி சென்று மத்திய அரசுக்கு நெருக்கடியைத் தர வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
சேலம்: தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லிக்கு சென்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடத்தில் பாமக தலைவர் ஜிகே மணி கூறியதாவது: '' தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்கும் நடவடிக்கைகல் குறித்து விவாதிக்க வேண்டும்.
பின் அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லிக்கு சென்று மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசு, பிரச்சனையைக்குத் தீர்வு சொன்ன பிறகுதான் தமிழ்நாடு திரும்ப வேண்டும்.
ஆனால்,தமிழக அரசு உள்கட்சி பிரச்சனையில் தான் கவனம் செலுத்துகிறதே தவிர மக்கள் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு ஜிகே மணி கூறினார்.