முழு அடைப்புப் போராட்ட எதிரொலி.. தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பஸ்கள் வெறிச்
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் குறைந்த அளவு பேருந்துகளிலும் பயணிகள் அதிகமில்லை. குறைந்த அளவே சரக்கு லாரிகளும் இயக்கப்படுகின்றன.
நெல்லை: தழகத்தில் இன்று முழு அடைப்புப் போரடடம் நடைபெற்று வருகிறது. ஆனால்,கேரள மாநிலத்துக்கு செங்கோட்டை புளியரை வழியாக வழக்கம் போல் சரக்கு வாகனங்களும் போக்குவரத்து வாகனங்களும் சென்றுகொண்டிருக்கின்றன.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முழு அடைப்புக்கு வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் தமிழகத்தில் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தமிழக எல்லைப்பகுதியான செங்கோட்டை- புளியரை வழியாக அரிசி,காய்கறிகள், முட்டை,பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அவையும் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.
இருமாநில போக்குவரத்தும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. ஆனால் பேருந்துகளில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணிக்கின்றனர். அதனால் பேருந்துகளில் கூட்டம் மிகக் குறைவாகவே உள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.