For Daily Alerts
Just In
நீட் தேர்விலிருந்து எப்படியாவது விலக்கு பெறுங்கள்.. தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
தமிழக சட்டசபையில் அதற்கு எதிராக தீர்மானம் போடப்பட்டுள்ளது. தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.
சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு நடத்த தமிழகத்தில் நெல்லை உட்பட மேலும் 3 நகரங்களில் மையங்கள் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து திருநாவுக்கரசர் கூறுகையில், "சமச்சீர் பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 9 லட்சம் மாணவர்கள், சிபிஎஸ்சி மாணவர்களோடு போட்டிபோட்டு வெற்றி பெற முடியாது. எனவேதான் ஜெயலலிதா காலத்திலேயே நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விதிவிலக்கு பெறப்பட்டது.
தற்போது நீட் தேர்வு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழக சட்டசபையில் அதற்கு எதிராக தீர்மானம் போடப்பட்டுள்ளது. தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும்" என்றார்.
Comments
English summary
Congress chief Tirunavukkarasar wants Tamilnadu should get relaxation from the NEET exam.