For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒருவேள இதுவும் அப்படி இருக்குமோ.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட, தமிழ் ஆசிரியை ஆதார் கார்டுடன் மாயம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருச்சி: திருமணம் நிச்சயமான நிலையில், திருச்சி மாவட்ட பள்ளி ஆசிரியை தனது காதலனுடன் திடீரென ஓட்டம் பிடித்துவிட்டார்.

திருச்சி, மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் புனிதா (24). இவர் சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

தினமும் தனது வீட்டில் இருந்து பள்ளி வேனில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்றும் அதேபோல் காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் புனிதா புறப்பட்டார். ஆனால் அவர் பாதி வழியிலேயே வேனில் இருந்து இறங்கியுள்ளார்.

மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு தொலைபேசியில் விசாரித்துள்ளனர். அப்போதுதான் புனிதா பள்ளிக்கு செல்லாதது தெரிய வந்தது.

புனிதாவின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இதற்கிடையே நேற்று காலை பணிக்கு சென்ற புனிதா வீட்டில் இருந்த அவரது ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளார்.

இதுதொடர்பாக அவரது பெற்றோர் இன்று காலை ஜீயபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாயமான ஆசிரியை புனிதா ஏற்கனவே ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அந்த வாலிபருடனேயே திருமணம் செய்துவைக்க சம்மதித்து உள்ளனர். வருகிற ஜூன் மாதம் அவர்களது திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஆசிரியை புனிதா மாயமாகி உள்ளார்.

கோடை விடுமுறை தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஆசிரியைகள் திடீரென காதலர்களுடன் மாயமாகும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

English summary
Teacher eloped with her lover in Trichy district. Nowadays teachers eloping with students incidents increasing in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X