For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி: ப்ளஸ் டூ மாணவி கடத்தி பலாத்காரம் 2 பேர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தருமபுரி: வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள புட்டிரெட்டிப்பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (பெயர் மாற்றம்). இவர் புட்டிரெட்டிப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Teen age girl Raped in Dharmapuri, Two Arrested

நேற்று முன்தினம் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் உறவினரை வழியனுப்புவதற்காக மாலதியின் பெற்றோர் சென்றுவிட்டனர். அப்போது மாலதி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தன் நண்பர்கள் பிரசாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் சென்று மாலதியை அருகில் உள்ள சிதலமடைந்த வீட்டிற்கு கடத்தி வந்திருக்கிறார்கள். சக்திவேல், சரண்யாவை பலாத்காரம் செய்ய சுரேஷும், பிரசாந்தும் காவலுக்கு நின்றிருக்கிறார்கள்.

மாலதியின் அலறல் சத்தம் கேட்கவும் ஊர்மக்கள் திரள ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்குள் மூவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இந்த தகவல் மாலதியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாலதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ் மற்றும் பிரசாந்தை கைது செய்தனர். சக்திவேல் மட்டும் தலை மறைவாக உள்ளார் அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் நடந்த நான்காவது பலாத்கார சம்பவமாகும். கடந்த 1ஆம் தேதி தேனி சின்னமனூரில் 5ஆம் வகுப்பு மாணவி நந்தினி மூன்று பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டார்.

கடந்த 15ஆம் தேதி வேலூரில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவரால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

கடந்த 16ஆம் தேதி குடியாத்தம் அருகே 6ஆம் வகுப்பு மாணவியை சக மாணவனே பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தான். இந்த அதிர்ச்சி நீங்கும் முன்பாக தர்மபுரியில் வீட்டில் இருந்த மாணவியை கடத்திச்சென்று பலாத்கரம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கும், இளம்பெண்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையே நிலவுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 17-year-old girl was allegedly gang-raped by her neighbours in Dharmapuri district on Friday. Police have arrested two person.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X