For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழையால் சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் செய்தித்தாள் பிரிண்ட் செய்வதையே நிறுத்திய தி ஹிந்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மழையால் செய்தித்தாள் வினியோகம் பாதிக்கப்படும் என்பதால், சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பிரிண்டிங்கை நிறுத்தியுள்ளது தி ஹிந்து.

இதுகுறித்து ஆங்கில ஹிந்து பத்திரிகையின் வெப்சைட்டில் கூறியிருப்பதாவது: கன மழை காரணமாக, சென்னை, திருப்பதி, வேலூர், புதுச்சேரி நகரங்களில் டிசம்பர் 2க்கான, பிரிண்ட் எடிசனை நிறுத்திவிட்டோம். வினியோகம் செய்யும் இடத்தில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The Hindu to cancel print edition in Chennai & 3 other centres

பிரிண்ட் செய்த பேப்பர்கள் வினியோகம் செய்யப்படவில்லை எனில் அது வீண் செலவாகிவிடும் என்பதால் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சென்னையில் நூற்றாண்டிலேயே இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே, அத்தியாவசிய தேவையான ஊடக சேவை கூட பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. மேலும், ஹிந்து தொடங்கப்பட்ட 1878ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான், தவிர்க்க முடியாத காரணம் ஒன்றுக்காக சென்னையில், ஹிந்து தனது பிரிண்ட்டிங்கை நிறுத்தியுள்ளதாம்.

English summary
Worst rain in 100 yrs forces The Hindu to cancel print edition in Chennai & 3 other centres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X