திருநாவுக்கரசர் காங்கிரசில் இல்லையா, 'அதிமுக அம்மா' அணியிலா இருக்கிறார்? தமிழிசை கிண்டல்
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா அல்லது அதிமுக அம்மா அணியில் இருக்கிறாரா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்ல்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸில் இருக்கிறாரா அல்லது அதிமுக அம்மா அணியில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: ''தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸில் இருக்கிறாரா அல்லது அதிமுக அம்மா அணியில் இருக்கிறாரா என்று சந்தேகம் எழும்பும் வகையில் தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். 'தினகரன் என்ன தேசதுரோகமா செய்துவிட்டார்?' என திருநாவுக்கரசர் தினகரனுக்கு பரிந்து பேசுகிறார்.
ஒட்டுக்கு காசு கொடுப்பது, இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுப்பதும் ஜனநாயக படுகொலை இல்லையா? மேலும் அவர் நான் அடுத்து என்ன நடக்கப் போகிறது என ஜோசியம் சொல்கிறேன் என்கிறார்.
ஜோசியம் சொல்வதால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்குமென்றால் ஜோசியம் சொல்வதில் தவறில்லை. நாங்கள் தொடர்ந்து ஜோசியம் சொல்லிக்கொண்டுதான் இருப்போம்'' - இவ்வாறு தமிழிசை கூறினார்.