2 முன்னாள் அமைச்சர்களுடன் களம் காணும் திமுக.. திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர்கள் பயோடேட்டா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 முன்னாள் அமைச்சர்களை களம் இறக்கியுள்ளது திமுக. அவர்கள் எ.வ.வேலு மற்றும் கு. பிச்சாண்டி ஆகியோர்.
வேலு திருவண்ணாமலையில் நிற்கிறார். பிச்சாண்டி கீழ்ப் பென்னாத்தூர் தொகுதியில் களம் காண்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா.
எ.வ.வேலு
திருவண்ணாமலையில் மீண்டும் போட்டியிடுகிறார் எ.வ.வேலு. 61 வயதான இவரது சொந்த ஊர் தண்டாரம்பட்டு அருகில் உள்ள சே. கூடலூர் கிராமம் ஆகும். கல்வித் தொழிலதிபராக வலம் வருபவர் வேலு. இதுதவிர திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் என கட்சியிலும் முக்கியஸ்தராக உள்ளார்..
எஸ்.பாபு
ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறார் எஸ்.பாபு. 28 வயதேயான இளைஞரான இவர் அரிசி ஆலை அதிபர் ஆவார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளராக இருக்கிறார். இவரது தந்தை ஆர். சிவானந்தம், 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் ஆவார்.
கே.வி.சேகரன்
போளூர் தொகுதியில் கே.வி. சேகரன் போட்டியிடுகிறார். 59 வயதான இவர் படித்தது 10ம் வகுப்பு வரை மட்டுமே. காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயி, காண்டிராக்டர் என வேறு முகங்களும் இவருக்கு உள்ளன. அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த இவர் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.
அம்பேத்குமார்
வந்தவாசி (தனி) தொகுதியில் போட்டியிடும் 39 வயது இளைஞர் அம்பேத்குமார், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சொந்த ஊர் வந்தவாசி வட்டத்திற்குட்பட்ட அராசூர் கிராமம். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக கட்சியில் பதவி வகிக்கிறார்.
கு.பிச்சாண்டி
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் கு.. 62 வயதான இவரது சொந்த ஊர் திருவண்ணாமலையாகும். திமுகவில் தணிக்கைக் குழு உறுப்பினராக இருக்கிறார்.
மு.பெ.கிரி
செங்கம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார் மு.பெ.. 40 வயதான இவர் பிளஸ்டூ படித்தவர். பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளராக இருக்கிறார்.