காரைக்குடியில் துளிர் வாசகர் விழாவில் "மந்திரமா தந்திரமா"!
காரைக்குடி: துளிர் அறிவியல் இதழின் வாசகர் விழா. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவர் மேனிலைப் பள்ளியில் துளிர்.அறிவியல் இதழின் 30ம் ஆண்டு வாசகர் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு ஆசிரியர் செந்தில்குமார்.வரவேற்புரையாற்றினார்.அறிவியல் விழிப்புணர்வு பாடல்களை கவிஞர் மிழ்கண்ணன் பாடினார்.
சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையுரையாற்றினார். எஸ்எம்எஸ்வி பள்ளித் தலைமையாசிரியர் முரு.வள்ளியப்பன்.உதவித் தலைமையாசிரியர் .ஹன்ரிபாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்
துளிர் பொறுப்பு ஆசிரியர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முத்துசாமி.அறிவியல் மாதிரிகளை செய்து காண்பித்து மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி யினை செய்து காண்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி இராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அமராவதிபுதூர் சுப்பிரமணியம் செட்டியார் மேனிலைப் பள்ளி, திருப்பத்தூர் பாபா அமீர் ஷா மேனிலைப் பள்ளி. காரைக்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் மேனிலைப் பள்ளி. மற்றும் மீனாட்சி பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை கூறினர்.
ஆசிரியர் குருராஜன் நன்றியுரையாற்றினார்.