For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு..முதல் முறையாக இன்று பன்னீர்செல்வம் தலைமையில் கேபினட் கூட்டம்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா உடல் நலமின்றி கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளி்த்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவு புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

TN Cabinet Meeting tomorrow

இந்நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது. மேலும் காவிரி மற்றும் அரசின் நிர்வாக செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

English summary
Tamil Nadu Cabinet Meeting will be held tomorrow 11.30 am in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X