For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடை பெற்றார் "அம்மா"...!

By Mathi
Google Oneindia Tamil News

-வங்கக் கடல் அன்னையின் தாலாட்டுகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் 'அம்மா' மீளா துயில் கொள்கிறார்

-இந்தியாவின் 3-வது பெரிய கட்சியின் மாபெரும் தலைவர் ஜெயலலிதாவின் சகாப்தம் மீளாதுயில் கொள்கிறது

-சந்தனப்பேழையில் வைத்து ஜெயலலிதாவின் உடல் துப்பாக்கிகள் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது

-வங்கக் கடலோரம் தமிழக திரை உலகின், அரசியல் அரங்கத்தின் மாபெரும் சகாப்தம் மீளாதுயில் கொள்கிறது

-ஜெ. உடல்நலம் பாதிக்கப்பட்டது முதலே அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலாவுடன் இருந்தார் ஜெ. அண்ணன் மகன் தீபக்

-ஜெ. பூத உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழை மூடப்பட்டது

-ஜெ. அண்ணன் மகன் தீபக்குடன் இறுதி சடங்குகளை இணைந்து செய்தார் சசிகலா

-ஜெ. உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தார் ஜெ. அண்ணன் மகன் தீபக்

-ஜெ.வின் பூத உடலில் இருந்து தேசியக் கொடி உரிய மரியாதையுடன் அகற்றப்பட்டது

-குலாம்நபி ஆசாத், சசிகலா கணவர் ம. நடராஜனும் இறுதி மரியாதை செலுத்தினார்

-காங். துணைத் தலைவர் ராகுல் இறுதி மரியாதை செலுத்தினார்

-தமிழக அரசு தலைமை செயலர் ராமமோகன்ராவ், முன்னாள் ஆளுநர் ரோசய்யா இறுதி மரியாதை

-ஜெயலலிதா உடலுக்கு முன்னாள் ஆளுநர் ரோசய்யா மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி

-மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன்

-முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,

-அமைச்சர் எடப்பாடி பன்னீர்செல்வம் ஜெ.வுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்

-ஜெயலலிதாவுக்கு முப்படையினரின் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

-சந்தனப்பேழையில் வைக்கப்பட்ட ஜெ. உடலுக்கு ஆளுநர் இறுதி மரியாதை

-சந்தனப்பேழையில் வைக்கப்பட்ட ஜெ. உடலுக்கு முப்படையினர் அணிவகுத்து மரியாதை

-சந்தனப்பேழையில் புரட்சித் தலைவி ஜெயலலிதா என பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது

-மீளாத்துயில் கொள்ள சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது ஜெயலலிதாவின் பூத உடல்

-ஜெ. பூத உடல் வைக்க சந்தனப்பேழை திறக்கப்பட்டது

-ஜெ. உடல் தாங்கிய கண்ணாடிபேழை இறக்கி வைக்கப்பட்டு முப்படை வீரர்கள் மரியாதை

-முப்படை வீரர்கள் தோள்தாங்கி செல்கிறது ஜெ. உடல் தாங்கிய கண்ணாடிபேழை

-ஜெ. நல்லடக்க நிகழ்வில் முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யாவும் பங்கேற்பு

-சந்தனபேழையில் வைக்க ஜெ. உடல் அடங்கிய பெட்டியை ராணுவ வீரர்கள் தோளில் சுமந்து சென்றனர்

-கண்ணாடிபேழையில் இருந்து ஜெ.வின் உடல் சந்தனபேழைக்கு மாற்றப்படுகிறது

TN CM Jayalalithaa no more

-ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டது ஜெ. உடல்

-ராணுவ கவச வாகனத்தில் இருந்து ஜெ. பூத உடல் இறக்கப்படுகிறது

-ஜெ.வின் பூத உடல் இறுதி சடங்குக்காக சந்தனபேழைக்கு மாற்றப்பட உள்ளது

-மக்களுக்காக நான்.. மக்களுக்காகவே நான் என்ற சிம்ம கர்ஜனை மீளா துயில்கொள்கிறது

-வங்கக் கடலன்னையின் தாலாட்டில் மீளா துயில் கொள்ளப் போகிறார் ஜெ.

TN CM Jayalalithaa no more

-எம்ஜிஆர் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சற்று பின்னே ஜெ. உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது

-மீளாதுயில் கொள்ளும் நினைவிடத்தை எட்டியது ஜெ. உடல் சென்ற வாகனம்

-எம்ஜிஆர் நினைவிட இறுதி சடங்கில் தலைவர்கள் பலரும் பங்கேற்பு

-ஜனாதிபதி பிரணாப், மத்திய அமைச்சர்கள், ஆளுநர் வித்யாசகர் ராவ் பங்கேற்பு

-தங்களது ஒற்றை தாரக மந்திரம் 'அம்மா'வுக்கு லட்சக்கணக்கான அதிமுகவினர் பிரியாவிடை

-எம்ஜிஆர் நினைவிடத்தை அடைந்தது ஜெ.வின் இறுதி ஊர்வலம்

-தமிழக அரசியலில் சிம்மமாக கர்ஜித்த இரும்புப் பெண்மணி ஜெ.

-இன்னும் சில நிமிடங்களில் சந்தனப்பேழையில் ஜெ.வின் உடல் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது

-மெரினா கடற்கரை சாலையை எட்டுகிறது ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம்

-தம் அரசியல் ஆசான், வழிகாட்டி எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே மீளா துயில் கொள்கிறார் ஜெ.

-மீளாத்துயில் கொள்ளும் இடத்தை நோக்கி நெருங்குகிறது ஜெ.வின் இறுதி ஊர்வலம்

-ஜெ. உடல் செல்லும் ராணுவ வாகனத்தில் ஓபிஎஸ்- உடன் உபி முதல்வர் அகிலேஷ் யாதவும் செல்கிறார்

-தமிழகத்தின் 'இரும்புப் பெண்மணி' 'இந்திரா காந்தி' ஜெ.வின் உடல் இன்னும் சிறிது நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

-ஜெ. உடலை கொண்டு செல்லும் ராணுவ வாகனத்தில் சசிகலா, ஓபிஎஸ் அமர்ந்துள்ளனர்

-அண்ணாசாலையில் திரண்ட லட்சக்கணக்கான மக்களும் ஜெ. இறுதி ஊர்வலத்தை பின் தொடர்கின்றனர்

-எம்ஜிஆர் நினைவிடம் நோக்கி வாலாஜா சிலை வழியாக ஜெ. இறுதி ஊர்வலம் பயணிக்கிறது

-ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

-அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகே ஜெ. இறுதி ஊர்வலம் செல்கிறது

-அண்ணாசாலை வழியாக ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் செல்கிறது

-மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் இருந்தும் ஜெ.வுக்கு பிரியாவிடை அளிக்கின்றனர் தொண்டர்கள்

-அண்ணா சாலை, அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக எம்ஜிஆர் நினைவிடம் செல்கிறது ஜெ. இறுதி ஊர்வலம்

-வீடுகளின் மாடிகளில் மரங்களில் ஜெ.வின் முகம் காண திரண்டுள்ளனர்

-ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்தூவி மக்கள் இறுதி அஞ்சலி

-சாலைகளின் இருபக்கமும் லட்சோபம் லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளனர்

-லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு ஜெ.வின் முகம் தெரியும் வகையில் ஊர்வலம் செல்கிறது

-எம்ஜிஆர் நினைவிடம் நோக்கி ஜெயலலிதாவின் பூத உடல் இறுதி யாத்திரை புறப்பட்டது

-லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருக்க ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

-ஜெயலலிதாவின் பூத உடலுடன் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு புறப்படுகிறது

-ஜெயலலிதாவின் பூத உடலை தாங்கிய ராணுவ வாகனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு புறப்பட இருக்கிறது

-ராணுவ வாகனத்தில் ஜெ. உடலுடன் சசிகலா, உறவினர்கள் அமர்ந்துள்ளனர்

-ஜெயலலிதாவின் இறுதிப் பயணம் தொடங்குகிறது

-ஜெயலலிதாவின் உடலுடன் ராணுவ வாகனம் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட தயாராக உள்ளது

-ஜெயலலிதாவின் உடல் முப்படையினரால் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது

-ராஜாஜி ஹாலில் இருந்து ராணுவ மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எடுத்து செல்லப்படுகிறது

-ராணுவ அதிகாரிகளிடம் ஜெவின் உடலை ஒப்படைத்து கண்ணீருடன் விடைபெற்றார் சசிகலா

-ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின

-கண்ணாடிப் பேழையில் வைத்து ஜெயலலிதாவின் உடல் மூடப்பட்டது

-ஜெயலலிதா உடல் அடங்கிய சவப்பெட்டியை ராணுவ அதிகாரிகள் மூடினர்

-ஜெயலலிதா மிகச்சிறந்த அரசியல் தலைவர் - ராகுல்காந்தி

-மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவரை நாடு இழந்து தவிக்கிறது - ராகுல்காந்தி

-ஜெ. உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி செலுத்தினார்

-ராகுல் காந்தி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-குலாம் நபி ஆசாத், திருநாவுக்கசரும் அஞ்சலி செலுத்தினர்

-இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது

-ராஜாஜி அரங்கிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது

-அண்ணா சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக எம்.ஜி.ஆர். சமாதியை ஊர்வலம் அடைகிறது

-எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் உடல் அடக்கம் நடைபெறும்

-இறுதி ஊர்வலத்தையொட்டி லட்சக்கணக்கில் தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சமாதியில் குவிந்துள்ளனர்

-இறுதி ஊர்வலத்திற்குப் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு

-ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் இறுதி ஊர்வலம் கண்காணிக்கப்படவுள்ளது

-இன்னும் சிறிது நேரத்தில் மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. உடல் நல்லடக்கம்!

-ஜெ. உடலுக்கு கேரளா ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் இறுதி அஞ்சலி

-ஜெ. உடலுக்கு மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் அஞ்சலி

-ஜெ. உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியும் அஞ்சலி

-கேரள ஆளுநர் சதாசிவம் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் அஞ்சலி செலுத்தினர்

-ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சென்னை வந்தடைந்தார்

-தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் வைகோ

-மதிமுக பொதுச்செயலர் வைகோ துணைவியாருடன் அஞ்சலி செலுத்தினார்

-தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அஞ்சலி செலுத்தினார்

-ராஜ்ய சபா எம்பி டி. ராஜா, சி. மகேந்திரன் ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி

-இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு: டி. ராஜா

-குணம் அடைந்துவிட்டார் என்ற நிலையில் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது: டி. ராஜா

-சிபிஐ சார்பில் ஜெயலலிதாவிற்கு எங்களது வணக்கம்: டி. ராஜா

-இலங்கை வடமாகாண சபையில் முதல்வர் ஜெ.வுக்கு இரங்கல்

-நடிகர் சிம்பு அஞ்சலி செலுத்தினார்

-கூட்டநெரிசல் தள்ளுமுள்ளுவில் சிக்கினார் நடிகை சரோஜா தேவி

-நடிகை சரோஜாதேவி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-புதுவை கண்ணன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

TN CM Jayalalithaa no more

-விவிஐவி வரிசைகளில் பொதுமக்களும் கலந்தனர்

-ஏராளமான பொதுமக்களும் மளமளவென வந்ததால் நெரிசல் ஏற்பட்டது

-ஜெயலலிதா உடல் அருகே யாரையும் செல்ல விடாமல் சுற்றி நின்று கொண்டனர்

-ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கில் திடீர் தள்ளுமுள்ளு

-சில மணி நேரங்களே இருப்பதால் ஜெயலலிதா முகத்தை கடைசியாக காண குவியும் கூட்டம்

-நெரிசலை சமாளிக்க முடியாமல் ஓபிஎஸ், அமைச்சர்கள் திணறல்

-முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-மகன் ரேவண்ணாவுடன் தேவெ கெளடா வந்திருந்தார்

-ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்

-உயிருடன் இருந்தபோது ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படாதவர் தீபா

-ஜெயலலிதா மறைவுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல் நாடுகள் இரங்கல்

-சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் இரங்கல்

-ஜெயலலிதா உடலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் அஞ்சலி

-வீரப்பெண்மணியை தமிழகம் இழந்து விட்டது - கெஜ்ரிவால் இரங்கல்

-ஜெ. உடலுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி

-மறைந்த ஜெயலலிதாவிற்கு டாக்டர் ராமதாஸ் நேரில் அஞ்சலி

-அன்புமணி, ஜி.கே. மணியோடு வந்த ராமதாஸ் மலர் வளையம் வைத்து ராமதாஸ் அஞ்சலி

-ஜெயலலிதா உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினர்

-ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு நாராயணசாமி நேரில் அஞ்சலி

-ஜெயலலிதா இரங்கலுக்கு கமல் வெளியிட்ட டிவிட்டால் சர்ச்சை

-ஜெயலலிதா பெயரை குறிப்பிடாமல் சார்ந்தவர்களுக்கு அனுதாபம் என கூறியுள்ளார் கமல்

-மதுரை ஆதீனம் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலாவிடம் போய் நீண்ட நேரம் கையைப் பிடித்து ஆறுதல் கூறிப் பேசினார்

-பேசி முடித்து விட்டு ஜெயலலிதா உடல் அடங்கிய சவப்பெட்டிக்குக் கீழே அமர்ந்தார் ஆதீனம்

-ஜெயலலிதா உடல் வைக்கப்பட உள்ள பீரங்கி வண்டி தனி விமானத்தில் சென்னை வருகை

-பீரங்கி வண்டியை டெல்லியில் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பி வைத்தது

-ஜெயலலிதாவின் உடல் பீரங்கி வண்டியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது

-மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

-மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

-மலர் வளையம் வைத்து ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

-அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலாவிடம் துக்கம் விசாரித்தார் மோடி

-சசிகலாவின் தலையைத் தொட்டு ஆறுதல் கூறினார்

-திடீரென குமுறி அழுத ஓ.பன்னீர் செல்வத்தின் தோளையும் தட்டி ஆறுதல் கூறினார்

-குமுறி அழுத ஓ.பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் மோடி தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல்

-ராஜாஜி அரங்கம் உள்ள பகுதிக்கு வந்து சேர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி

-மோடி வரும் நேரம் பார்த்து ஓ.பன்னீிர் செல்வம், சசிகலா, இளவரசி திடீர் மாயம்

-பிரதமர் வருகைக்காக சசிகலா நடராஜன் குடும்பம் , அமைச்சர்கள் காத்திருப்பு

-தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அருகிலேயே நிற்கிறார் சசிகலாவின் கணவர் நடராஜன்

-சென்னை விமான நிலையத்திலிருந்து தனி ஹெிகாப்டரில் மோடி புறப்பட்டார்

-அடையாறு கடற்படை தளத்தில் வந்து இறங்கியதும் ராஜாஜி ஹாலுக்கு வருகிறார்

-ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு மோடி அஞ்சலி செலுத்துகிறார்

-ஜெயலலிதா மறைவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்

-சென்னை வந்த விமானத்தில கோளாறு ஏற்பட்டதால் டெல்லிக்கே திரும்பிச் சென்றார் பிரணாப்

-தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ஜனாதிபதியுடன் சென்னை புறப்பட்டது தனி விமானம்

-ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருக்கிறார் ஜனாதிபதி பிரணாப்

-ஜெயலலிதா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

-அமெரிக்காவில் இருப்பதால் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை- கமல்ஹாசன்

-மீண்டும் சென்னை புறப்பட்டார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

-சந்தனக் கடத்தல் புகழ் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜயக்குமார் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-அஞ்சலி செலுத்திய பின்னர் இறுகிய முகத்துடன் திரும்பிச் சென்றார் விஜயக்குமார்

-ஜெயலலிதா ஆட்சியில்தான் விஜயக்குமார் தலைமையிலான போலீஸ் படை வீரப்பனை சுட்டுக் கொன்றது

-டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

-ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் ரஜினிகாந்த் வருகை

-தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் வருகை

-சிறந்த நிர்வாகதன்மை கொண்டவர் ஜெயலலிதா: சுமித்ரா மகாஜன் புகழாரம்

-ஜெயலலிதாவின் மறைவு நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு: சுமித்ரா மகாஜன்

-நாடாளுமன்ற சபா நாயகர் சுமித்ரா மகாஜன் ஜெயலிதாவிற்கு புகழாரம்

-நடிகைகள் ரேவதி, அர்ச்சனா, சிம்ரன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-தைரியமான, அறிவுத்திறமையான தலைவர் ஜெயலலிதா: கனிமொழி

-திமுக எம்.பி. கனிமொழி, நடிகை குஷ்பு ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-சசிகலாவிடம் துக்கம் விசாரித்Lதனர்

-தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் அஞ்சலி

-தமிழக மக்கள் ஜெயலலிதாவின் பெயரை வரலாற்றில் பதிவு செய்வார்கள் - சாலமன் பாப்பையா இரங்கல்

-இரட்டை விரலைக் காட்டும் ஜெயலலிதா மக்களுக்கு ஏதும் சொல்லாமலேயே புறப்பட்டுப் போய் விட்டார் - பாப்பையா இரங்கல்

-ஜெயலலிதா மறைவிற்கு மரியாதை செலுத்தி நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

-அஞ்சாமை, அயராமைதான் ஜெயலலிதாவின் ஆளுமை - திருமாவளவன் புகழாரம்

-ஜெயலலிதாவுக்கு தமிழக அரசியலில் தனி இடம், சிறப்பிடம் என்றும் உண்டு - திருமாவளவன்

-தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை திறம்பட செய்தவர் ஜெயலலிதா - மு.,க.ஸ்டாலின் புகழாரம்

ஸ்டாலின்

-சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் இரங்கல் தெரிவித்த பின்னர் ஸ்டாலின் கிளம்பினார்

ஸ்டாலின்

-சசிகலாவை பார்த்து பொதுவாக கும்பிட்டார் ஸ்டாலின்

-ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வேலு உள்ளிட்டோரும் வந்தனர்

-எங்களுக்கு சசிகலா வேண்டாம்- அதிமுக பெண் தொண்டர்கள் ஆவேசக் குரல்

-எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள இடத்தில் கூடிய பெண்கள் கோஷமிட்டு ஆவேசம்

-ஜெயலலிதாவின் உடக்கம் செய்யப்படவுள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அதிமுக தொண்டர்கள் குவிகிறார்கள்

-ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்

-எம்.ஜிஆர் சமாதி உள்ள காமராஜர் சாலை அதிமுகவினர் மயமாக காணப்படுகிறது

TN CM Jayalalithaa no more

-போலீஸார் பெருமளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு வருகின்றனர்

-எம்.ஜி.ஆர். சமாதியில் ஜெயலலிதா அடக்கத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

-எம்.ஜி.ஆர் சமாதியை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்

-துணிச்சலுக்கு மறு பெயர் ஜெயலலிதா - கலைப்புலி தாணு

-அன்பில் ஒரு தாயாக அழகில் ஒரு தேவதையாக அறிவில் மகா மந்திரியாக விளங்கியவர் ஜெயலலிதா - தாணு

-ஆதரவில் கருணையாகவும், கண்டிப்பில் ஆசிரியையாகவும் வாழ்ந்தவர் ஜெயலலிதா - தாணு

-அன்பு, பாசம், நேசம், கண்டிப்பு, அக்கறை என எல்லா உணரவுகளையும் கொண்டு வாழ்ந்த மனித தெய்வம் - தாணு

-ஜெயலலிதாவின் மறைவு உலகத் தமிழர்களுக்கெல்லாம் ஒரு பேரிழப்பாகும் - தாணு

-சத்யராஜ், சிபிராஜ், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் அஞ்சலி

-சசிகலாவை போய்ப் பார்த்து கும்பிட்டார் சத்யராஜ்

-நடிகர் சங்க நிர்வாகிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-சங்கத் தலைவர் நாசர் தலைமையில் குட்டி பத்மினி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அ{ஞ்சலி

-ஒய்ஜி மகேந்திரன், கோவை சரளா, கார்த்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்

-ஜெயலலிதாவின் திடீர் மறைவால் தமிழக மக்கள் சோகத்தில் உள்ளனர் - இசையமைப்பாளர் இமான்

-ஒரு பெண்ணாக அவர் துணிச்சலாக செயல்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்து விட்டது - இமான்

-எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா - இமான்

-ஏழை எளிய மக்களுக்காக அவர் செய்தவை பாராட்டுக்குரியது - இமான்

-ஏழை எளிய மக்கள் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதை நான் தினமும் பார்த்து ஆச்சரியப்படுவேன் - இமான்

-அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்- இமான்

-ஏழைகளுக்காக பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா - கேரள ஆளுநர் சதாசிவம்

-அம்மா உணவகத் திட்டம் அதில் முக்கியமானது - ஆளுநர் சதாசிவம்

-புத்தி கூர்மை கொண்டவர் - தைரியமாக எதையும் சமாளிக்கக் கூடியவர்- சதாசிவம்

-அவரது மறைவு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே இழப்பு - சதாசிவம்

-தனி விமானம் மூலம் சென்னை கிளம்பினார் மோடி

-மத்திய அரசு சார்பில் வெங்கையா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்துவர்

-மோடி சென்னை புறப்பட்டார்

-முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த கிளம்பினார் மோடி

TN CM Jayalalithaa no more

-சிறைக்குப் போய் விட்டு திரும்பியபோதும் அதே முகத்தோடு, புன்னகையோடு வந்தவர் ஜெயலலிதா- சரோஜாதேவி

-என்னென்ன கஷ்டம், அவமானத்தை அனுபவித்தார் ஜெயலலிதா - சரோஜாதேவி உருக்கம்

-என்னிடம் கன்னடத்தில்தான் பேசுவார் ஜெயலலிதா - சரோஜாதேவி

-சிறு சிறு வேடங்களில் நடித்து உங்களை இறக்கிக் கொள்ளாதீர்கள் என்று கூறுவார் - சரோஜாதேவி

-ஜெயலலிதா பெரிய தெய்வம் - சரோஜாதேவி

-தமிழக மக்களுக்கு தாய் போல அவர்

-ஷூட்டிங்குக்கு வரும்போது தேவதை போல வருவார் ஜெயலலிதா - சரோஜாதேவி

-நடிகர் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார்

-தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி

-ஜெயலலிதாவிற்கு இளையராஜா அஞ்சலி

-ராஜாஜி அரங்கத்தின் தடுப்புக் கேட்டை உடைத்துக் கொண்டு தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்

-இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு தொண்டர்கள் பாய்வதால் பரபரப்பு

-தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை

-தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன

-ஜெயலலிதா உடலுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி அஞ்சலி

-ஜெயலலிதா உடலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி

-ஜெ. உடலுக்கு நடிகர் பிரபு குடும்பத்தினர் அஞ்சலி- கண்ணீர்விட்ட சசிகலா

-ஜெ. மறைவுக்கு இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது மத்திய அரசு

-ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து 9 மணிக்கு கிளம்புகிறார் பிரதமர் மோடி

- சென்னை வரும் மோடி 12 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு வந்து அஞ்சலி செலுத்துவார் என தகவல்

-ஜெயலலிதா உடலுக்கு நடிகர் விஜய், நடிகர் தாமு அஞ்சலி செலுத்தினர்

-ஜெ.வுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் ராகுல் காந்தி

-ஜெயலலிதா உடலுக்கு அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி

-பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்

-சென்னை விமான நிலையத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது

-ராஜாஜி ஹால் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பொதுமக்கள் கியூ நீண்டுள்ளது

-ஜெ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரளாவிலும் பள்ளி, கல்லூரிகள் இன்று விடுமுறை

TN CM Jayalalithaa no more

-ஜெ. உடலுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி

-ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுகின்றனர்

-ஜெ.வுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடல்

-ஜெயலலிதா உடலுக்கு சசிகலா கணவர் நடராஜன் அஞ்சலி

-ராஜாஜி ஹாலுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வருகை

-ஜெயலலிதா உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அஞ்சலி

-ஜெயலலிதா உடல் அருகே டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார் நிற்கின்றனர்

-இளவரசி மகன் விவேக், அவரது மருமகள் ஆகியோர் நின்று கொண்டுள்ளனர்

-மகாதேவன், டாக்டர் ராஜ மாதங்கி சுற்றி நின்று கொண்டுள்ளனர்

-ஜெயலலிதா உடல் அருகே அவரது ரத்த சொந்தங்கள் யாரும் இல்லை

-ஜெயலலிதா உடல் அருகே மன்னார்குடி குடும்பத்தினர் சுற்றி நின்று கொண்டுள்ளனர்

-முதல்வர், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் படியில் வரிசையாக அமர்ந்துள்ளனர்

-ஜெயலலிதா உடலுக்கு அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

-ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்

-முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி

-ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

-சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் ஜெயலலிதா உடல் அருகே நிற்கின்றனர்

-ஜெயலலிதா உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படுகிறது

-ஜெ., உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி மீது தேசியக்கொடி போர்த்தப்படுகிறது

-ஜெயலலிதாவின் உடன் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது

-ஜெயலலிதா உடலுக்கு அதிமுக கட்சிக்கொடி போர்த்தப்பட்டுள்ளது

-ஜெயலலிதா உடலுக்கு பச்சைப்பட்டு உடுத்தப்பட்டுள்ளது

-ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது

-ராஜாஜி ஹால் முன் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்ணீல் அஞ்சலி

-இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமல்ல... அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை

English summary
Apollo Hospital announces demise of Tamilndu CM J Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X