For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர டெல்லியில் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை?

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவரும் முயற்சியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் கொண்டுவர தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முனைப்புடன் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நியூ18 தமிழ்நாடு செய்தியாளர் அருள் ஸ்டீபன் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அருள் ஸ்டீபன் பதிவிட்டுள்ளதாவது:

TN CM O Panneerselvam consults on Ordinance for Jallikattu?

தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை ஊர் காரர் என்ற முறையில் சந்தித்து பேசினேன். மனுசன் உண்மையாவே ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் நடக்கனும் நினைக்கிறார்.

புதிய சட்டம் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றே தோன்றுகிறது.

நான் பேசும் போது சிந்தலைச்சேரி என்று சொன்ன போது பெரிய கோபுரம் உள்ள சர்ச் இருக்குமே அந்த ஊர் என்று சொல்லி ஊர் காரராகவே பேசியது மிகவும் மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டு நடக்கனும்றது தான் நம்ம நம்பிக்கை, அதுக்காக என்னாவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வோம் தம்பி என்று சொன்னது கூடுதல் மகிழ்ச்சி

TN CM O Panneerselvam consults on Ordinance for Jallikattu?

சென்னை வந்தால் வீட்டுக்கு வாருங்கள் என்று அவ்வளவு மரியாதையுடன் கூறினார்.. இயல்பாகவே ரொம்ப நல்ல மனிதர் போல

கையில் மொபைல் போஃன் எடுத்து செல்ல வேண்டாம் என்று முதல்வரின் தனி செயலாளர் கூறியதால் புகைப்படம் இல்லை.

இவ்வாறு அருள் ஸ்டீபன் பதிவிட்டுள்ளார்.

English summary
Sources said that TamilNadu Chief Minister O Panneerselvam consulted with legal experts on Ordinance for Jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X