For Daily Alerts
Just In
ஜனாதிபதி தேர்தல்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களித்தார்
ஜனாதிபதி தேர்தலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் வாக்களிக்கிறார்.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் முகவர் என்பதால் அவர் சென்னையிலேயே வாக்களித்தார்.
நாட்டின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் 4,896 எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்து வருகின்றனர்
அதற்காக நாடாளுமன்றம் மற்றும் மாநில தலைமை செயலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 55 எம்பிக்களுக்கு மட்டும் சொந்த மாநிலங்களில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழக எம்பிக்கள் டெல்லியில் வாக்களித்து வருகின்றனர்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் முகவர் என்பதால் அவர் சென்னையிலேயே வாக்களித்தார். சென்னையில் மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ள கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அப்துல்லா சென்னையில் வாக்களித்தார்.
Comments
English summary
Presidential Election: Pon.Radhakrishan is appointed as election agent, so he is going to vote in Chennai itself.