For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... செங்கை- தாம்பரம் இடையே சில மின்சார ரயில்கள் ரத்து!

Google Oneindia Tamil News

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.30, 1.09, 1.47 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு நோக்கி புறப்படும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1.50, 2.25, 3.05 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் மின்சார ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

Trains cancel between Tambaram and Chengalpet

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.50 மணிக்கு திருமால்பூர் நோக்கி புறப்படும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் மின்சார ரயிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) ‘அறுபத்து மூன்று நாயன்மார்கள்' திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு வேளச்சேரி நோக்கியும், வேளச்சேரியில் இருந்து இரவு 11.15 மணிக்கு கடற்கரைக்கு நோக்கியும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது'எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
Because of maintenance work, the railway department has canceled some trains between Tambaram and Chengalpet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X