போக்குவரத்து ஊழியர்களின் 12 ஆவது ஊதிய ஒப்பந்த கோரிக்கை – இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் 12 வது ஊதிய ஒப்பந்தம் குறித்த 4 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
12 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அமைத்த குழுவுடன் பேசி வருகின்றனர்.
இதுவரை 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், 2003 பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று 4 வது கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக்கழக பயிற்சி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.
பேச்சுவார்த்தையில் 42 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என நம்புவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.