For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி கைதி புனேவில் தப்பியோட்டம்- "மூச்சா" போவதாக கூறி விட்டு எஸ்கேப் ஆனார்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் இருந்து புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் அங்கிருந்து ரயிலில் திரும்பும் போது இன்று காலை திடீரென்று தப்பி ஓடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபரின் பெயர் தவமணி. இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளை புனேவில் வைத்து போலியாக அச்சடித்து தமிழகத்தில் புழக்கத்தில் விட்டதாக புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர். இதுதொடர்பான வழக்கு புனேவில் நிலுவையில் உள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் இவர் மீது கொலை உள்ளிட்ட 5 வழக்குகளும் உள்ளன. இது தொடர்பாக இவர் திருச்சி சிறையில் கடந்த 2 வருடமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் புனே வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை முடிந்து திரும்பிய நிலையில்தான் போலீசாரின் கண்களில் மண்ணைத்தூவும் வகையில் கனநேரத்தில் தப்பி ஓடியுள்ளார் கைதி தவமணி.

வழக்கு விசாரணை முடிவடைந்து சோலாப்பூர் - குல்பர்கா மின்சார ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் ரயில் வேகம் குறைந்துள்ளது. அச்சமயத்தில் பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற தவமணி, திடீரென்று வெளியில் குதித்து ஓடிவிட்டார். தற்போது அவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

English summary
Prisoner Thavamani escaped from police today in pune when started journey to Trichy again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X