சென்னையில் 2-வது நாளாக தொடரும் விசாரணை... தினகரனை விஜயவாடா அழைத்து செல்கிறது டெல்லி போலீஸ்!
ஹவாலா பணம் தொடர்பாக விசாரணை நடத்த டிடிவி தினகரனை ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அழைத்து செல்ல டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஹவாலா பணம் தொடர்பாக விசாரணை நடத்த டிடிவி தினகரனை ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அழைத்து செல்ல டெல்லி போலீஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புரோக்கர் சுகேஷ் சந்திரா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட தினகரன், மல்லிகார்ஜுனன் ஆகியோரிடம் ராஜாஜி பவனிலும், தினகரன் வீட்டிலும் நேற்று 6 மணி நேரத்துக்கும்மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
இரண்டாவது நாளாக இருவரிடமும் ராஜாஜி பவனில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஹவாலா பணம் கைமாற்றும் கும்பல்கள் அதிகம் உள்ளதால் போலீஸார் டிடிவி தினகரனை அங்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவுள்ளனர்.
இதனிடையே டெல்லியில் தினகரனுக்கு உதவிய ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலருக்கு டெல்லி போலீஸ் வலைவிரித்துள்ளதாம்.