தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இங்கே வருவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ அசால்ட்
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் எங்கள் பக்கம் நிச்சயம் வருவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் எங்கள் பக்கம் நிச்சயம் வருவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை பழங்காநத்தத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று உதவிகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜூ, " அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். அதுபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள்.
இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் நல்லபடியே நடக்கும்.
கட்சியின் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து செல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஒருங்கிணைத்துச் செல்லும் ஆற்றலை அம்மாவிடம் நல்லமுறையில் அவர் பயிற்சி எடுத்துள்ளார். எல்லாமே நல்லப்படியாக நடக்கும்" என்று தெரிவித்தார்.