அதிமுகவுக்கு ரெண்டு தண்ணிலயும் கண்டம்!: ட்விட்டரில் கலகல
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ட்விட்டரில் தமிழக மக்களின் ட்வீட்கள் தான் அதிகம் உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் வரழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் ட்விட்டரில் சென்னையில் பெய்து வரும் மழை பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
|
ஏரிகள்
ஏரிகளின் வாழ்வுதனை கட்டிடங்கள் கவ்வும்...
பின் ஏரிகளே வெல்லும்.
#மழை_மொழி என அருண் என்பவர் தெரிவித்துள்ளார்.
|
சித்திரம்
சென்னையின் தற்போதைய நிலவரத்தை கருத்து சித்திரமாக வெளியிட்டுள்ளார் நீனா.
|
கண்டம்
அதிமுகவுக்கு ரெண்டு தண்ணிலயும் கண்டம்! என உலகானந்தா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
|
தூர்வாரி
500 கோடி ருபாய் நிவாரண நிதி வழங்குவதற்கு 100-200 கோடி செலவில் சென்னை சுற்று வட்டார ஏரிகளை தூர்வாரியிருந்தால் ஏன் இந்த நிலைமை?
#chennairains என நவீன் கேள்வி எழுப்பியுள்ளார்.