For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்வு எழுத சென்ற 12ஆம் வகுப்பு மாணவிகள் மாயம் - போலீசார் தீவிர விசாரணை

கோவையில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவிகள் திடீரென மாயமான நிகழ்வு அப்பகுதி பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கண்ணம்பாளையம் சர்வ மத காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் காயத்திரி. ஏ.வி.ஆர். நகரை சேர்ந்த மணிகண்டனின் மகள் சித்ரா. இவர்கள் இருவரும் கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.

Two 12th standard female students missing in Coimbatore

பொதுதேர்வு எழுதுவதற்காக அவர்கள் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு சரியான தகவல் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான மாணவிகளை தேடி வருகின்றனர். மணவிகள் கடத்தப்பட்டனனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Two 12th standard female students missing in Coimbatore. police searching them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X