For Daily Alerts
Just In
நெல்லை அருகே மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி.. கிணறு தூர் வாரிய போது சோகம்
நெல்லை அருகே கிணறு தூர் வாரும் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை: நெல்லை அருகே கிணறு தூர் வாரும் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அமுத்த ஆழ்வாகுறிச்சியில் தங்கராஜ், ஆறுமுகம் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் கிணறு தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மண் சரிந்தது.
இதில் 2 தொழிலாளர்களும் சிக்கினர். மீட்பதற்குள் மூச்சு திணறி அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்தது வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிணறு தோண்டும் பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Two persons have died in near Nellai at the landslide while digging for well. Police seized the body and sent to the post mortem.
Story first published: Wednesday, June 21, 2017, 17:47 [IST]