தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர் கருணாநிதி - கவுரவ விருது கொடுத்த அமெரிக்க நிறுவனம்
சென்னை: அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ரோச்சஸ்டன் நிறுவனத்தின் சார்பில், திமுக தலைவர் கருணாநிதிக்கு '' தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர் '' என்ற விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் உலகின் சிறந்த சிந்தனையாளர்களுக்கும்,மக்கள் தலைவர்களுக்கும் இந்த விருதினை வழங்கி வரும் ரோச்சஸ்டன் நிறுவனம் ,இந்த ஆண்டுக்கான விருதை தலைவர் கருணாநிதிக்கு வழங்கியுள்ளது.
இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ரோச்சஸ்டன் நிறுவனத்தின் சார்பில், '' தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர் '' (Distinguished Statesman) என்ற விருதினை அதன் தலைவர் காஜா மொய்தின் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.ஹாசிம் ஆகியோர் கருணாநிதியிடம் வழங்கினர். அப்போது திமுக பொருளாளர் ஸ்டாலின் உடனிருந்தார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய வகையில் போற்றுதலுக்குரிய தலைவராகவும்,அரசியல் சிந்தனையாளராகவும்,எழுத்தாளராகவும்,மொழி அறிஞராகவும்,பன்முக ஆற்றலோடு செயல்பட்டு வரும் தங்களுக்கு இந்த விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று அந்த விருதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.