For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு தேர்தல் வரும் என்ற கமலின் கனவு ஒருபோதும் பலிக்காது - வைகைச் செல்வன்

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறப்போவதாக கூறிய கமல்ஹாசனின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் கமல்ஹாசன் கனவு காண்பதை சினிமா உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரப்போவதாக போவதாக கூறிய கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் கூறியுள்ளார்.

புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், மக்கள் விரும்பாத நிலையில் தமிழகத்தில் அரசு நான்கு ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றார். கட்டாய திருமணம் போல ஆட்சியை ஏன் நீடிக்க வேண்டும் என்றார்.

Vaigaiselvan rebuts Actor Kamal's comments on election

தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான புதிய தலைவரை மக்களே தேர்வு செய்யட்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார். இதற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் பதிலளித்துள்ளார்.

நடிகர் கமல் நல்ல நடிகர். கனவுலக நாயகன். அவர் கனவு காண்பதை சினிமா உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்ற கமல்ஹாசனின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.

மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு ஐந்து ஆண்டு காலம் நிறைவு செய்யும் என்றும் தெரிவித்தார். எனவே நடிகர் கமல்ஹாசன் கனவு காண்பதை சினிமா உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

English summary
ADMK Spokes person Vaigaiselvan has rebutted actor Kamal Haasan's call for eletion in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X