காவிரிக் கரையில் வைகோ.. கலர்ஃபுல் டிரஸ்ஸில்!
சென்னை: தமிழகமே உயிராய், தமிழர்களை சுவாசமாக வாழ்ந்து வரும் வைகோ.. ஒரு வித்தியாசத் தலைவர். தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக உரத்தக் குரல் கொடுப்பதில் மற்றவர்களை விட ஒரு படி மேலே சற்றே உயரமாய் நிற்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.
எதிர்க்கட்சி வரிசையிலேயே காலம் காலமாய் இவரை இருத்தி வைத்து வேடிக்கை பார்த்து விட்ட தமிழகத்தின் மீது சற்றும் கோப்படாமல், இவர் அளவுக்கு வியர்வை சிந்திய தலைவர் யாருமில்லை என்று கூறலாம்.
நடைபயணமாக தமிழகத்தின் பல பகுதிகளையும் சுற்றி வந்த தலைவரான வைகோ தற்போதும் ஒரு உயரிய நோக்கத்திற்காக பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மதுக் கொடுமையிலிருந்து மக்களை மீட்க
தமிழகமே இன்று மதுவின் போதையில் மதி மயங்கிக் கிடக்கிறது. அந்தக் கொடுமையிலிருந்து தமிழகத்தையும், தமிழக மக்களையும் மீட்க நெடும் பயணமாக தமிழகத்தின் தஞ்சைத் தரணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வைகோ.
விவசாய நிலம் காக்க
அதேபோல காவிரி பாசனப் பகுதியை பாழடித்து வரும் பல்வேறு சீரழிவுகளிலிருந்து விவசாய நிலங்களைக் காக்கக் கோரியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் வைகோ.
12ம் தேதி தொடங்கி
டிசம்பர் 12ம் தேதி இந்த வாகனப் பிரசார சுற்றுப்பயணத்தை வைகோ தொடங்கினார். 22ம் தேதி அதை நிறைவு செய்கிறார்.
கும்பகோணத்தில்
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கும்பகோணம் வந்த வைகோ நேற்று முன்தினம் இரவு அங்கு தங்கினர். நேற்று காலை நடைப் பயிற்சிக்காக காவிரிக்கரைக்குப் போனார்.
பொங்கி வந்த காவிரி
நேற்று காலையில் நடைபயிற்சி சென்றபோது கும்பகோணம் அருகில் காவிரிக்கரையில் நின்று பாய்ந்து வரும் தண்ணீரை கண்டு ரசித்தார் வைகோ.