For Quick Alerts
For Daily Alerts
Just In
பட்டா மாற்ற ரூ.4500 லஞ்சம்: வேலூர் அருகே விஏஓ கைது!
வேலூர் அருகே பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். லஞ்சப் பணத்தைப் பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
ஆம்பூர்: ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பத்தில் ராஜேந்திரன் என்பவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பட்டா மாற்ற அவர் 4500 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைதானார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் பழனி. இவரை பட்டா மாறுதலுக்காக ராஜேந்திரன் என்பவர் அனுகியுள்ளார்.
அப்போது பட்டா மாற்ற சான்றிதழில் கையெழுத்திட விஏஓ பழனி, ராஜேந்திரனிடம் 4500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை கொடுக்க மனமில்லாத ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் படி ரசாயணம் தடவிய பணத்தை ராஜேந்திரன் பழனியிடம் வழங்கியுள்ளார். பணத்தை பழனி பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Comments
English summary
A VAO arrested in near vellore for accepting bribe from a person who wants sign to change the patta. Regarding his complaint vigilance police arrested him.
Story first published: Wednesday, November 30, 2016, 17:50 [IST]