கோவை வன்முறையில் கோமாதா கன்றை டூவீலரில் அபேஸ் செய்த இந்து முன்னணி
கோவை: கோவையில் இந்து முன்னணியின் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் போது கன்று குட்டி ஒன்றையும் திருடி சென்றதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ. வாசுகி தெரிவித்துள்ளார்.
கோவையில் சசிக்குமார் படுகொலையைத் தொடர்ந்து இறுதி ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இந்த வன்முறை பாதித்த இடங்களைப் பார்வையிட்ட உ. வாசுகி கூறியுள்ளதாவது:
பல கடைகளில் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. மீதி கொளுத்தப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களில் வந்த செல்போன் கடையைப் பார்த்தோம். உரிமையாளர் தற்கொலை மனநிலையில் உள்ளார். ரூ.60 லட்சம் இழப்பு. அவர் இசுலாமியர்.
5,6 வீடுகள் சில்லு சில்லாக நொறுங்கிக் கிடக்கின்றன. அவர்களின் மாட்டுக்கறி கடை தகர்க்கப்பட்டுள்ளது. மாட்டின் மீது அக்கறை என நினைத்து விடாதீர்கள். அங்கிருந்த மாடுகள் அடிக்கப் பட்டு, ஒரு கன்றுக்குட்டி இரு சக்கர வாகனத்தில் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வாசுகி கூறியதாக சிபிஎம் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.