நள்ளிரவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்... ஃபேஸ்புக்கில் படம் போட்டு குதூகலம்
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அரசியல் தலைவராக இல்லாமல் ஒரு குடும்பத்தலைவராக விஜயகாந்த் தனது பிறந்தநாளினை மனைவி, மகன்கள் சகிதம் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த படம் முகநூல் பக்கத்தில் வலம் வருகிறது.
முன்னதாக, இந்த ஆண்டு விஜயகாந்த் தனது பிறந்த நாளை 'பசுமை தமிழகம்' என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 264 தொகுதிகளிலும் சுமார் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகக்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. கட்சி அலுவலக வளாகத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு விஜயகாந்த் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவில் ராமாபுரம் எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை விஜயகாந்த் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார்.