நெல்லை மாவட்டத்தில் விஜயகாந்த் இன்றும், நாளையும் தீவிர பிரச்சாரம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இரண்டு நாள் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் வழியாக குமரி மாவட்டத்திற்கு வரும் விஜயகாந்த், தக்கலையில் நடைபெறும் கூட்டத்தில் 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் வரும் விஜயகாந்த் ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, நெல்லை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இன்று இரவு அவர் நெல்லையில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை கடையநல்லூர், தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடையநல்லூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் ராஜபாளையம் புறப்பட்டு செல்கிறார். இந்த தகவலை மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி தெரிவித்துள்ளார்.