நாக்கை துருத்தி... இவங்க எல்லாம் சொம்பைகளா? அறிவுகெட்டவனுகளா- திருமங்கலத்தில் விஜயகாந்த் பாய்ச்சல்
திருமங்கலம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் நாக்கை துருக்கி தொண்டர்களை வசைபாடுவது, மிரட்டுவது தொடர் கதையாகி வருகிறது.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் நேற்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவரை பேசவிடாமல் தொண்டர்கள் கூச்சலிட்டு கொண்டே இருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் நாக்கை துருத்தியபடி ஆவேசமாக தொண்டர்களை எச்சரித்து பேசியதாவது:
யார்டா..அது.. யார்ரா... உள்ள எவன்டா கத்துறது?... சொல்லிகிட்டே இருக்கிறேன் கேட்கலை (நாக்கை துருத்தியபடி).... அறிவு....கெட்டவனுகளா
சொல்லிகிட்டே இருக்கிறேன்...கேட்கமாட்டீங்களா? இங்க இருக்கிறவனுக எல்லாம் சொம்பைகளா? சொல்லிகிட்டே இருக்கேன் கேட்கலை... உனக்கு அறிவு இல்லை...
யார்ரா அது?அறிவு இல்லை... இருக்கிற ஆளுக எல்லாம் அமைதியா இருக்காங்க இல்ல... சும்மா இருக்கனும்... அப்புறம் இவங்களை விட்டே விரட்டுங்கன்னுவ... பார்த்துக்க.. பேசாம இரு..
சொல்லிகிட்டே இருக்கேன்... விஜயகாந்த் வாழ்கங்கிறான் ஒருத்தன்... ஒருத்தன் கத்துறான்... என்னா இது?
என்றபடி விஜயகாந்த் பேச்சை தொடர தொடர்ந்து தொண்டர்கள் கூச்சல் எழுப்பினர்...இதனால் மேடையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து கையை அசைத்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.
"எல்லோருக்கும் டாடா காட்டிவிட்டேன்... இதற்கு மேல் கெஞ்ச முடியாது... வேற மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டியதிருக்கும்... ஜாக்கிரதையா இருங்கள்" என பேசிக் கொண்டிருந்தார். அப்போது போட்டோகிராபர் ஒருவர் விஜயகாந்தை தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்க கடுப்பாகிப் போன அவர், மைக்கை விட்டு தனியே வந்து 'நல்லா எடுங்க எனக் கூறியபடி கண் விழிகளை அகலமாக திறந்துகாட்டி இதோ எடுங்க' என்றார்.
இதனால் பொதுக்கூட்ட மேடை நகைச்சுவை அரங்கமாக மாறிப்போனது.