இனி இறங்குமுகம்தான்... ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
சென்னை: தன்னைவிட சத்தி படைத்தவர் உலகில் இல்லை என்று கருதிய ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு ஓங்கி குட்டு வைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்து வீட்டிலேயே பதுங்கி வாழும் ஜெயலலிதாவுக்கு இனி தொடர்ந்து இறங்குமுகம்தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபத்துடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டசபையில் தே.மு.தி.க., உறுப்பினர்கள் மக்களின் பிரச்னைகள் குறித்து பேசி வருகின்றனர். அவர்களை தங்களது ஜனநாயக கடமையை செய்ய விடாமல் அ.தி.மு.க., அரசு தடுத்து வருகிறது. நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் தே.மு.தி.க., உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை.
சட்டசபை என்பது அதிமுகவினரின் பணத்தில் நடத்தப்படுவதல்ல. மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுகிறது. மக்கள் பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் பேச இடம் கொடுக்காமல், அவர்களை ஜனநாயக கடமையாற்றவிடாமல் அவையில் இருந்து அப்புறப்படுத்தும் செயலில் மட்டுமே இந்த அரசு ஈடுபட்டு வருகிறது.
தன்னைவிட சத்தி படைத்தவர் உலகில் இல்லை என்று கருதிய ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு ஓங்கி குட்டு வைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்து வீட்டிலேயே பதுங்கி வாழும் ஜெயலலிதாவுக்கு இனி தொடர்ந்து இறங்குமுகம்தான் என்று தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.