For Daily Alerts
Just In
தன் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களுடன் ஜெ சமாதிக்குப் போன நடிகை விந்தியா!
சென்னை: நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா இன்று மாலை மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்குப் போனார்.
மாலை 6 மணிக்குச் சென்ற அவர் தன் திருப்பதி தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை ஜெயலலிதா சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதல்வரின் அன்பைப் பெற்ற அதிமுக பேச்சாளர்களில் விந்தியாவும் ஒருவர். ஜெயலலிதா மறைந்ததுமே அவர் அரசியல் ஆர்வம் இழந்து, அமைதியாக ஒதுங்கியிருந்தார். பன்னீர் செல்வம், சசிகலா கோஷ்டி மோதலைக் கண்டு கொள்ளவில்லை. தன்னை அதிமுக உறுப்பினர் என்று சொல்லிக் கொண்டாலும், தன் ஆதரவு யாருக்கு என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இப்போது ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்துள்ளார்.
Comments
English summary
Actress Vindhya has visited Jayalalithaa memorial today and pay her tribute with Mangoes