மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட விஷால் நற்பணி மன்றத்தினர்!
நடிகர் விஷாலின் வேண்டுகோளின் பெயரில் 'புரட்சி தளபதி விஷால் மன்றம்' சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நேற்று தாம்பரம் அருகில் உள்ள காரப்பாக்கம் என்னும் இடத்தில் கன மழையால் ஒருவர் தன் வீட்டின் கீழ் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுவிட்டதால் , முதல் மாடியில் சிக்கிகொண்டார் அவரை அந்த பகுதியை சேர்ந்த விஷால் நற்பணி மன்றத்தினர் படகில் சென்று மீட்டனர்.
நற்பணி
இதே போல பல்வேறு மாவட்டத்தில் உள்ள நற்பணி மன்றத்தினர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
விஷாலின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி தலைமை சார்பில் மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது
அரியலூரில்
அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நில வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.
திருவள்ளூரில்
திருவள்ளுவர் மாவட்டம், மத்தூரில் மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
விஷால் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து ரசிகர்களும் முடிந்த அளவு உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும், அதற்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் விஷால் தெரிவித்தார்.