For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா கன மழை... நிரம்புகிறது கெலவரப்பள்ளி- தென்பெண்ணையில் வெள்ள அபாயம்

By Mathi
Google Oneindia Tamil News

ஓசூர்: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் 2,000 கனடி நீரும் உபரி நீராக தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி வருகிறது.

Water level increases in Kelavarappalli reservoir

அணையின் மொத்த கொள்ளளவு 44.3 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 42.5 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வரும் 2,000 கனஅடி நீர் அப்படியே தென்பெண்ணையாற்றில் உபரி நீராக திறந்துவிடப்படுகிறது.

Water level increases in Kelavarappalli reservoir

இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆடுகிறது. இதைத் தொடர்ந்து கரையோரத்தில் உள்ள 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

English summary
Water level in Kelavarappalli reservoir has reached 42.5 feet with the full reservoir level being 44.3 feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X