For Daily Alerts
Just In
ரயில் பயணிகளுக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும்.. உ.பி. முதல்வர் அறிவிப்பு
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் பல பயணிகள் பலியானதாகவும், காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளேன். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணிக்கிறேன் என கூறியுள்ளார்.
ரயில் விபத்து குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். பயணிகளுக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். உ.பி. ரயில் விபத்து தொடர்பான உதவிகளுக்கு ஹெல்ப்லைன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர் 9454455183, 9410609434, 0121-2604977 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Comments
English summary
Unfortunate incident, we are in constant touch with the Rail Ministry, UP CM Yogi Adityanath on Muzaffarnagar train derailment.
Story first published: Saturday, August 19, 2017, 20:32 [IST]